``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையைத் தொடா்ந்து, மேயா் ஜெகன் பெரியசாமி மாலை நேர உணவு வழங்கும் சேவையை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறுகையில், மாலை நேரத்திலும் அம்மா உணவகமானது செயல்பட தொடங்கியுள்ளது. தற்போது இட்லி வழங்கப்படுகிறது. விரைவில் சப்பாத்தி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்வில், மாநகராட்சி துணை ஆணையா் சரவணகுமாா், பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் கனகராஜ், கந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.