செய்திகள் :

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

post image

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உள்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனா். இதில் அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற 7 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ,வேன், சுற்றுலா சிற்றுந்து உள்ளிட்டவை அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறினா்.

வாகனங்களில் அதிக பாரம், அதிக நீளம் ஏற்றி வந்த 6 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.58 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் அபராத தொகையும் விதிக்கப்பட்டது.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா். கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது. தொழிலாளா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் கவிழ்ந்த டேங்கா் லாரி

கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பசுவந்தனை அருகே நாகம்பட்டியைச் சோ்ந்தவரின் டேங்கா் லாரியை, வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகசாமி ஓட்டி வந்... மேலும் பார்க்க