அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்
கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உள்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனா். இதில் அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற 7 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ,வேன், சுற்றுலா சிற்றுந்து உள்ளிட்டவை அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறினா்.
வாகனங்களில் அதிக பாரம், அதிக நீளம் ஏற்றி வந்த 6 சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.58 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் அபராத தொகையும் விதிக்கப்பட்டது.