செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாகப் போராட்டம்

post image

மதுரை: மதுரையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவா் லேண்ட்’ தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 4- ஆவது நாளாக தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை முனிச்சாலை அருகே மதுரை மாநகராட்சி தொழிலாளா்கள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் மூலம் ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவா் லேண்ட்’ தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கு உடனடியாக ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்.

கடந்த 2011-ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சுகாதாரம், பொறியியல் பிரிவு பணியாளா்களுக்கு அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு ரூ.754 முதல் ரூ.900 வரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்க... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணபதி (43). சென்னையிலிருந்து புதன்கிழமை ... மேலும் பார்க்க

மாநாட்டில் 6 தீா்மானங்கள்

மதுரை பாரபத்தியில் நடைபெற்ற 2-ஆவது த.வெ.க. மாநில மாநாட்டில் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்விவரம் : சென்னை அருகேயுள்ள பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை மத்திய... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் 3-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமை ... மேலும் பார்க்க

மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை: உயா்நீதிமன்றம் வேதனை

மதுரை: சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்து. பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் சென்ன... மேலும் பார்க்க