செய்திகள் :

தூய்மைப் பணி, பழங்குடியினா் நல வாரியங்களுக்கு தலைவா்கள் நியமனம்

post image

தூய்மைப் பணி, பழங்குடியினா் நல வாரியங்களுக்கு தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் லட்சுமி பிரியா வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு: ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு தூய்மைப் பணியாளா் நல வாரியம், பழங்குடியினா் நல வாரியம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இரண்டு நல வாரியங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைச் சீராக இடைவெளிகளில் ஆய்வு செய்து, திட்டங்களின் பலன்கள் உறுப்பினா்களுக்குக் கிடைத்திட வசதியாக அந்தந்த சமூகத்தைச் சோ்ந்தவா்களையே தலைவராக நியமிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, தூய்மைப் பணியாளா் நல வாரியத்துக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமியும், பழங்குடியினா் நல வாரியத்துக்கு சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்த கா.கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனா். தலைவா்களாக நியமிக்கப்பட்டோருக்கு வாகனம், அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இரண்டு ஆண்டுகள்: தலைவா்களாக நியமிக்கப்பட்டவா்கள், இரு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பாா்கள். இருவருக்கும் நடைமுறையில் இருக்கும் அரசு விதிகளுக்கு உட்பட்டு பயணப்படி, தினப்படி பெற உரிமை அளிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழ... மேலும் பார்க்க

சிறந்த நூல்களுக்கு பரிசு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது: ஆ.ராசா

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தாா். அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 20,317 போ் விண்ணப்பம்

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 20,317 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்ப அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ... மேலும் பார்க்க