செய்திகள் :

தென்காசி காசிவிஸ்வநாதர்‌ கோயிலில் முறைகேடு; கூடுதல் ஆணையர் நடத்திய ஆய்வால் பரபரப்பு; பின்னணி என்ன?

post image

தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் உடனுறை உலகம்மன் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காகத் திருக்கோயிலின் ராஜகோபுரம், கொடிமரம் ஆகியவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மகா கும்பாபிஷேக பணிகளையொட்டி கோயில் ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டுதல், கொடிமரம் புதுப்பித்தல், பூஜை பொருள்கள், மாலை உள்ளிட்ட திருக்கோவில் தொடர்பான வரவு செலவுகளில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இந்த புகாரையடுத்து தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.

தென்காசி

திருக்கோவில் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், ஆவணங்கள், கோவில் வரவு செலவு திட்ட அறிக்கைகள், குடமுழுக்கு செலவு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர், முறைகேடு தொடர்பான சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக கோயில் பணியாளர்களிடம் துறைரீதியான விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திடீர் ஆய்வு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் ராஜகோபுரம் அருகே கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

சபரிமலை: `ஃபிளை ஓவரில் காத்திருக்க வேண்டாம்!' - பதினெட்டாம் படி ஏறியதும் ஐயப்ப சுவாமியை தரிசிக்கலாம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும், புதிய வழிமுறைகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு செயல்படுத்தி வருக... மேலும் பார்க்க

பிரம்மாஸ்திர ஹோமம்: மூன்று வகை சத்ருக்கள், எதிர்ப்பு, எதிரிகளைக் கட்டுப்படுத்தும் பகளாமுகி வழிபாடு!

பிரம்மாஸ்திர ஹோமம்: மூன்று வகை சத்ருக்கள், எதிர்ப்பு, எதிரிகளைக் கட்டுப்படுத்தும் பகளாமுகி வழிபாடு! வரும் 2025 மார்ச் 13-ம் நாள் வியாழக்கிழமை மாசி பௌர்ணமி நன்னாளில் காலை 8 மணி முதல் இங்கு பகளாமுகி பிர... மேலும் பார்க்க

வடலூர்: தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு சொந்த வாகனத்தில் செல்கிறீர்களா? – இதைப் படிங்க முதல்ல!

ஜோதி தரிசன நேரங்கள் என்னென்ன ?கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் நாளை 154-வது தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர... மேலும் பார்க்க

சிதானந்தஜி: விரும்பியவாறே உங்கள் வாழ்க்கை அமைய எளிய ரகசியம்; கலந்து கொள்ளுங்கள் அனுமதி இலவசம்

9-ம் தேதி (9-2-2025) அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் (திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம்) எப்படி வாழ்வது? என்ற தலைப்பில் ஆன்மிக சிறப்புரை ஆற்றவுள்ளார் சி... மேலும் பார்க்க