செய்திகள் :

சபரிமலை: `ஃபிளை ஓவரில் காத்திருக்க வேண்டாம்!' - பதினெட்டாம் படி ஏறியதும் ஐயப்ப சுவாமியை தரிசிக்கலாம்

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும், புதிய வழிமுறைகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த கால மகரவிளக்கு பூஜை சமயத்தில் 18 மணி நேரம் சபரிமலை நடை திறந்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இந்த நிலையில் பதினெட்டாம் படி ஏறியதும் ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் நடைமுறையை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது பதினெட்டாம் படி ஏறிய பின்னரும் இடதுபுறம் வழியாக ஃபிளை ஓவரில் ஏறி சன்னிதானத்தை சுற்றி வர குறைந்தது 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். சில சமயம் அதிக நேரம் காத்திருந்து மீண்டும் கீழே வந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் நடைமுறை உள்ளது. 1989-ம் ஆண்டு இந்த ஃபிளை ஓவர் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து மேம்பாலத்தில் ஏறி சுற்றிவந்து காத்திருந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் நிலைதான் உள்ளது. இந்த நிலையை மாற்றி பதினெட்டாம் படி ஏறிய 30 விநாடிகளில் நேரடியாக ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் வகையில் பாதை மாற்றி அமைக்கப்பட உள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஃபிளை ஓவர்

பங்குனி மாத பூஜைகளுக்காக மார்ச் 14-ம் தேதி சபரிமலை நடை திறக்கும்போது இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்து உள்ளது. அதன்படி பதினெட்டாம் படி ஏறிச்செல்லும் பக்தர்கள் கொடிமரத்தின் வலது மற்றும் இடதுபுறம் வழியாக ஐயப்ப சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இடதுபுறம் வழியாக செல்லும் பக்தர்கள் சற்று உயரமான பகுதியில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும், வலதுபுறம் வழியாக செல்லும் பக்தர்கள் தரை மட்டத்திலேயே நின்று தரிசனம் செய்யும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வலது மற்றும் இடதுபுற தரிசன பாதையை பிரிக்கும் வகையில் நடுப்பகுதியில் நீளவாக்கில் உண்டியல் வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

சபரிமலை சன்னிதானமும் ஃபிளை ஓவரும்

புதிய தரிசன நடைமுறைக்கு கேரளா ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதன் முலம் கொடிமரத்தில் இருந்து கருவறை முன்பகுதி வரை சுமார் 15 மீட்டர் தூரம் வரிசையில் செல்லும்போதே ஐயப்ப சுவாமியை தரிசிக்க முடியும். இதுவரை உள்ள நடைமுறைப்படி சுவாமி திருநடை முன்பு 3 வரிசைகளாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுவாமி திருநடை முன்பு சென்ற உடனே போலீஸார் நகரச்சொல்லும் நிலை உள்ளது. பக்தர்களை நகர்த்தும் விதமாக போலீஸார் தள்ளுவதாகவும் புகார்கள் எழுந்தன. புதிய வழியில் சற்று அதிக நேரம் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பிரம்மாஸ்திர ஹோமம்: மூன்று வகை சத்ருக்கள், எதிர்ப்பு, எதிரிகளைக் கட்டுப்படுத்தும் பகளாமுகி வழிபாடு!

பிரம்மாஸ்திர ஹோமம்: மூன்று வகை சத்ருக்கள், எதிர்ப்பு, எதிரிகளைக் கட்டுப்படுத்தும் பகளாமுகி வழிபாடு! வரும் 2025 மார்ச் 13-ம் நாள் வியாழக்கிழமை மாசி பௌர்ணமி நன்னாளில் காலை 8 மணி முதல் இங்கு பகளாமுகி பிர... மேலும் பார்க்க

வடலூர்: தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு சொந்த வாகனத்தில் செல்கிறீர்களா? – இதைப் படிங்க முதல்ல!

ஜோதி தரிசன நேரங்கள் என்னென்ன ?கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் நாளை 154-வது தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர... மேலும் பார்க்க

சிதானந்தஜி: விரும்பியவாறே உங்கள் வாழ்க்கை அமைய எளிய ரகசியம்; கலந்து கொள்ளுங்கள் அனுமதி இலவசம்

9-ம் தேதி (9-2-2025) அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் (திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம்) எப்படி வாழ்வது? என்ற தலைப்பில் ஆன்மிக சிறப்புரை ஆற்றவுள்ளார் சி... மேலும் பார்க்க

மண்ணச்சநல்லூர்: ரூ.50 கோடி மதிப்பிலான 1000 ஆண்டு பழைமையான ஐம்பொன் சாமி சிலைகள்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ளவர்கள் தங்களது வீட்டிற்கு அ... மேலும் பார்க்க