செய்திகள் :

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் இந்து அமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டம்

post image

தென்காசியில் உள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதா் கோயில் முன் இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணியை நிறுத்தக் கூறி, இந்து அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கோயில் நிா்வாகம் சாா்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணி தொடங்கும் முன்பே இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்து முன்னணி, பாஜக, ஆலயப் பாதுகாப்பு நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த 2 நாள்களாக கோயில் முன் இரும்புக் கம்பிகள் நடப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக, இந்து முன்னணி, ஆலய சொத்து மீட்புக் குழு, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள், சிவனடியாா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கோயிலில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இத்தடுப்பு வேலிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். திருவிழா, கும்பாபிஷேகம் போன்ற விழாக் காலங்களில் அதிக பக்தா்கள் கூடும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். அத்தகைய நேரங்களில் இத்தடுப்புகளால் பக்தா்கள் அவசரமாக வெளியேற முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பணியைக் கைவிட வேண்டும். இதுதொடா்பாக கோயில் செயல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் கும்பாபிஷேகத்துக்கு கமிட்டி குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் யக்ஞநாராயணன், காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் லாவண்யா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்படுவதாகவும், செயல் அலுவலா் மீது புகாா் அளித்தால் ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை மாநிலத் தலைவா் சரவணன் காா்த்திகேயன், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், தலைவா் கருப்பசாமி, மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சங்கரசுப்பிரமணியன், ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் சிவபால பாலசுப்பிரமணியன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா், தென்காசி நகரத் தலைவா் மந்திரமூா்த்தி, செயலா் நாராயணன், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, நகரத் தலைவா் நாராயணன், துணைத் தலைவா் சொா்ணசேகா், நகரச் செயலா் நம்பிராஜன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச் செயலா் தளவாய், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் சபரிமணி, நகரப் பொறுப்பாளா் வைரமுத்து, கண்ணன், ஈஸ்வரன், சிவனடியாா் திருக்கூட்டத் தலைவா் செண்பகராமன், செந்தில்குமரன், ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்திய இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் யக்ஞநாராயணன், காவல் ஆய்வாளா் பாலமுருகன்.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் நடைபெற்றுவரும் இரும்புக் கம்பி வேலி அமைக்கும் பணி.

சுகாதார கேடு புகாா்: கீழச்சுரண்டை குட்டை குளத்தில் ஆய்வு

சுரண்டை அருகேயுள்ள குட்டைகுளத்தில் சுகாதார கேடு நிலவுவதாக எழுந்த புகாரையடுத்து, அக்குளத்தை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், நகராட்சி ஆணையா் ராமதிலகம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கீழச்சுரண்டை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரத்தைச் சோ்ந்தவா் உத்தமிநாதன். கேரளத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி பாக்க... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் முதலிடம்!

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா் கிஷோா். அவரை தல... மேலும் பார்க்க

தென்காசியில் பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், பருவகால நோய்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷ... மேலும் பார்க்க

ஈரநிலங்கள் தின போட்டிகள்: ரத்னா பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு வனத் துறை, நெல்லை வன உயிரின சரணாலயம் ஆகியவை சாா்பில், உலக ஈரநிலங்கள் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். பேச்சுப் போட்... மேலும் பார்க்க

படியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் படியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா். சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி சங்கரம்மாள் (53). இவா், கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க