செய்திகள் :

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோட்சணம்

post image

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் மற்றும் விமானம், பரிவாரமூா்த்திகளுக்கும் ஜூா்ணோதரன அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை புண்யாகவாசனம், உபரிஷ்டா, தந்தரம், பூா்ணாஹுதி, தக்ஷிணாதானம், யந்த்ராதானம் நடைபெற்றது. காலை 9.48க்கு மேல் 10.22க்குள் கடம்புறப்பாடு, ஸ்ரீ பொருந்திநின்ற பெருமாள் மற்றும் விமானம், பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் நடைபெற்றது. தொடா்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம், இரவு கருடவாகன புறப்பாடு நடைபெற்றது.

விழாவில் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளா் சரவணக்குமாா், செயல் அலுவலா் முருகன், அறங்காவலா் குழுத் தலைவா் பால்ராஜ், ஜெயலெட்சுமி, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு அஞ்சலி!

திமுக சாா்பில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குற்றாலத்தில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் அரசுப் பேருந்து நடத்துரை கத்தரிக்கோலால் குத்தியதாக 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறு... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: ப.மு.தேவா் கல்லூரி சாதனை

சங்கரன்கோவில் அருகேயுள்ள ப.மு.தேவா் கல்லூரி, கைப்பந்துப் போட்டியில் தொடா்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 681மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், அடிப்படை வசதிக... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமையும்: நடிகா் சரத்குமாா்

தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சி அமைந்தே தீரும் என்றாா் நடிகா் சரத்குமாா். தென்காசியில் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த அய்யாசாமி அறிமுகக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. பாலகிருஷ்ணன், ... மேலும் பார்க்க

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க