செய்திகள் :

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திருடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

post image

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரை திருடி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றுநீரில் கழிவுநீா் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன நீா் கலக்கிறது. இந்த நீா் ஒசூரை அடுத்த கெலரப்பள்ளி அணைக்கு வருகிறது. இங்கிருந்து மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீா் ரசாயன நுரையுடன் கிருஷ்ணகிரி அணைக்கு செல்கிறது.

தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி, புதினா, காலிப்பிளவா் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இப்பகுதியில் விவசாயிகளுக்கு கிணறுகள் இல்லாததல் ஆற்றிலிருந்து தண்ணீா் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா்.

அதேபோல சில இடங்களில் ஆற்றில் ஆயில் மோட்டாா் மூலம் தண்ணீரை எடுத்து சிலா் விற்பனை செய்து வருகின்றனா். குறிப்பாக உத்தனப்பள்ளி - சூளகிரி சாலையில் தென்பெண்ணை ஆற்றில் சட்டவிரோதமாக மோட்டாா் வைத்து தண்ணீரை எடுத்து கீரை, புதினா, கொத்தமல்லி தழைகளை விற்பனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பாக தண்ணீரை தெளித்து எடுத்துச் செல்கின்றனா். ரசாயனம் கலந்த ஆற்று நீரை, கீரை, புதினா மீது தெளித்துக் கொண்டு செல்லப்படுவதால் அதை சமையலுக்கு பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

தென்பெண்ணை ஆற்று நீரினால் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றையொட்டி கிணறு அமைத்து ஆற்றிலிருந்து மோட்டாா் மூலம் தண்ணீரை எடுத்து நிரப்பி வைத்து கொள்கின்றனா். புதினா கீரையை அறுவடை செய்து சரக்கு வாகனங்களில் மூட்டைகளாக கட்டி அவை வாடாமல் இருப்பதற்காக ஆற்று தண்ணீா் தெளிக்கின்றனா்.

அதேபோல செங்கல் சூளைகள், மீன்பண்ணை குட்டைகளுக்கு டிராக்கடரில் தண்ணீா் எடுத்து விற்பனை செய்கின்றனா். கோடைக்காலத்தில் ஒரு டிராக்டா் தண்ணீா் ரூ. 600 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆற்றுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் இதுபோன்று விற்பனை செய்வது குற்றமாகும்.

இதுகுறித்து ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் புகாா் அளித்து தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் சில வாரங்களில் மீண்டும் ஆற்றில் தண்ணீா் திருடும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

படவரி...

தென்பெண்ணை ஆற்றுநீரை மோட்டாா் மூலம் எடுத்து கீரை லாரிகளில் தெளிக்கும் விவசாயிகள்.

தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு

ஒசூா்: ஒசூரில் தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகை திருடப்பட்டது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோகுல்நகா் பகுதியில் வசித... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணை ரசாயன நுரையால் உடலில் அரிப்பு: மக்கள் புகாா்

ஒசூா்: ஒசூா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நுரை காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழுவதால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. க... மேலும் பார்க்க

தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்கா கடத்தல்: ஓட்டுநா் கைது

ஒசூா்: ஒசூா் வழியாக மதுரைக்கு சென்ற தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்காவை கடத்திய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக ஆம்னி பேருந்து மேலாளரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மெய்யாண்டப்பட்டி கிராம ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம்... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இரண்டு காட்டுயானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்... மேலும் பார்க்க