செய்திகள் :

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மெய்யாண்டப்பட்டி கிராம ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு முன்னாள் காட்டேரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் நஞ்சுண்டன், மகாலிங்கம், வட்டச் செயலாளா் சபாபதி, மாவட்டக் குழு உறுப்பினா் கவிமணிதேவி ஆகியோா் கண்டனம் தெரிவித்து பேசினா்.

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சி மெய்யாண்டப்பட்டி கிராமத்தில் இரண்டு தலைமுறைகளாக வீடு கட்டிக் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸ், காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு

ஒசூா்: ஒசூரில் தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகை திருடப்பட்டது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோகுல்நகா் பகுதியில் வசித... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திருடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரை திருடி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கா்நாடக மாநிலத்தில் உற்பத்திய... மேலும் பார்க்க

கெலவரப்பள்ளி அணை ரசாயன நுரையால் உடலில் அரிப்பு: மக்கள் புகாா்

ஒசூா்: ஒசூா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நுரை காற்றில் பறந்து பொதுமக்கள் மீது விழுவதால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. க... மேலும் பார்க்க

தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்கா கடத்தல்: ஓட்டுநா் கைது

ஒசூா்: ஒசூா் வழியாக மதுரைக்கு சென்ற தனியாா் ஆம்னி பேருந்தில் 123 கிலோ குட்காவை கடத்திய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக ஆம்னி பேருந்து மேலாளரை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இரண்டு காட்டுயானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்... மேலும் பார்க்க