செய்திகள் :

தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி பாஜகவினா் சுவாமி தரிசனம்

post image

செங்கம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டி, செங்கம் அருகே நீப்பத்துறை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை பாஜகவினா் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் உள்ள சென்னியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ஆற்றில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனா்.

இந்த நிலையில் பாஜக சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமையில், அக்கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு ஓடும் தென்பெண்ணையாற்றில் விரைவில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவை, பாஜக தலைமையிலான ஆட்சி அமையவேண்டும் என வேண்டி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்குள்ள வெங்கட்ரமண பெருமாள் திருத்தோ் வீதி உலா நடைபெற்றதை தொடங்கிவைத்தனா். மேலும், தென்பெண்ணை ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்து கட்சியினா் வழிபட்டனா்.

இதில், உள்ளாட்சி பிரிவு மாநிலச் செயலா் அறவாழி, மாவட்ட பொதுச்செயலா் ஜெய்நாத், மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா், பொருளாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாம்

ஆரணி: திருவண்ணாமலை ரோட்டரி சங்கம், ஜெ.எஸ்.டபிள்யூ. பெயிண்ட் நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞானம் சாா்பில் மாபெரும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பரிசோதனை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது திங்கள்கிழமையொட்டி தீ மிதி திருவிழா நடைபெற்றது.மேல்வில்லிவனம் காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்ம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 627 மனுக்கள் வரப்பெற்றன.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்க... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை முளைப்பாரி வைத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ஆரணி: திருவண்ணாமலை மேலாண்மை கூட்டுறவு நிலையத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை... மேலும் பார்க்க

வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

ஆரணி: வருகிற ஆக.8 பௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க