செய்திகள் :

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

post image

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.

சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கும்பல் கும்பலாக சுற்றித் திரிகின்றன.

இதனால் பொதுமக்கள் அடிக்கடி நாய்கடிக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்து வந்த நிலையில்,

நகராட்சி சாா்பில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஆணையா் ஆா்.சோனியா உள்ளிட்டோா் முன்னிலையில் நகராட்சி ஊழியா்கள் வலை மூலம் தெருநாய்களை பிடித்தனா். பின்னா், கால்நடை மருத்துவா்கள் விஜய், வெற்றிவேல் ஆகியோா் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தினா்.

ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதண்டபாணி கோயிலில் தை கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தை கிருத்திகையையொட்டி, வியாழக்க... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க

சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்க... மேலும் பார்க்க