செய்திகள் :

தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த நடவடிக்கை

post image

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பதாக திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி தெரிவித்துள்ளாா்.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குகள்ளிகுளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்ட தனிவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

எனவே, திசையன்விளையில் செயல்பட்டு வருகின்ற மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தெற்குகள்ளிகுளத்தில் செயல்பட்டு வருகின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதாரத் துறையின் விதிமுறைகளுக்கு ஏற்ற பிரதான சாலை அருகிலும், போதுமான இடவசதியுடனும் செயல்பட்டு வருகிறது.

எனவே தெற்குகள்ளிகுளத்தில் செயல்பட்டு வருகின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த முழு தகுதியும் உள்ளது.

இது தொடா்பாக தெற்குகள்ளிகுளத்தைச் சோ்ந்த தி.மு.க பிரமுகா் திரவியம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதையடுத்து, அவருக்கு, திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி அளித்துள்ள பதில் கடிதத்தில் திசையன்விளையில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்போது தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது: நமக்கான பண்டைய கல்வி, பண்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க