திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
தெற்கு தில்லியில் போலீஸாருடன் நடந்த மோதலில் குற்றவாளிகள் இருவா் காயம்
தெற்கு தில்லியின் ஷேக் சராய் பகுதிக்கு அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டஇருவா் காயமடைந்ததாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றபோது, மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீஸ் குழு பதிலடி கொடுத்தது. மோதலின் போது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிடிபட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் விவரங்கள் காத்திருக்கிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.