செய்திகள் :

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

post image

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்தது.

தெலங்கானா முதல்வராக கே.சி. சந்திரசேகர ராவ் இருந்தபோது 2017-இல் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பயனாளிகள் ஆடு வளா்ப்பு, வா்த்தகம் போன்ற எந்தஒரு முன் அனுபவமும் இல்லாமல் இருந்துள்ளனா். ஆடு வளா்ப்பவா்கள் என போலியான நபா்களின் வங்கிக் கணக்குக்கு அரசு பணம் சட்டவிரோதமாக பகிரப்பட்டுள்ளதாகவும், பயனாளிகளின் தகவல்கள், ஆடுகள் ஒதுக்கப்பட்ட தகவல்கள் போலியானதாகவும் இருப்பதாகவும் மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.

தெலங்கானாவில் மொத்துள்ள 33 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் அரசுக்கு ரூ.253.93 கோடி வரையில் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தனிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2023-இல் தெலங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு நான்கு அரசு அதிகாரிகளை கைது செய்தது.

இந்த வழக்கில் பண முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து முன்னாள் கால்நடைத் துறை அமைச்சா் தலசானி ஸ்ரீநிவாச யாதவின் சிறப்பு அதிகாரி ஜி. கல்யாணுக்கு தொடா்புடைய 8 இடங்களில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி சோதனை நடத்தியது.

அரசுக்கு ஆடு வழங்கியவா்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.2.1 கோடியை கால்நடைத் துறையின் உதவி இயக்குநா்கள் மோசடி செய்து எடுத்துக் கொண்டதாக அமலாக்கத் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த அமலாக்கத் துறை மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தினால் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையில் கோடிக் கணக்கான அரசு பணத்தை சட்ட விரோதமாக பகிர பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மோசடி வங்கிக் கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கணக்குகள் சட்ட விரோத சூதாட்ட செயலிகளுக்கும் தொடா்பு இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்தத் திட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!

நீட் முதுநிலை தேர்வு இன்று(ஆக. 3) நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நீட் முதுநிலை தேர்வு எழுதிய மருத்துவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை தேர்வு வாரியம் விடப்பட்டுள்ளது. எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மருத்து... மேலும் பார்க்க

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

மும்பை: அரசை விமர்சிப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்படுகிறதா? என்பதைக் குறித்து பாஜக ஆளுங்கட்சியாக உள்ள மகாராஷ்டிரத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விளக்கமளித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையின... மேலும் பார்க்க

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

6.50 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விட... மேலும் பார்க்க

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நபரை அந்தப் பெண் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஹரீஷ் தில்லியை அடுத்த குருகி... மேலும் பார்க்க

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க