செய்திகள் :

தெலங்கானா: கண்ணிவெடித் தாக்குதலில் 3 காவல் அதிகாரிகள் பலி!

post image

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் அம்மாநில காவல் துறை அதிகாரிகள் 3 பேர் பலியாகியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் காவல் துறையினர் இன்று (மே 8) காலை 7.30 மணியளவில் வெடிகுண்டுகளைக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வஸீது காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு மாவோயிஸ்டுகள் நிறுவியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன கண்ணிவெடியானது வெடித்து சிதறியது. இதில், 3 போலீஸ் அதிகாரிகள் சம்பவயிடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் அங்குள்ள வனப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினர் நிறுவியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளாக செயல்பட்டு வந்த நபர்கள் பெரும்பாலானோர் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்டது... மேலும் பார்க்க

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்... மேலும் பார்க்க

அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து உத்தரப் பிரதேச முதல்வருக்கு ரா... மேலும் பார்க்க

தவறான தகவல்களைப் பரப்பும் பாகிஸ்தான்: சோஃபியா குரேஷி

பாகிஸ்தான் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவந்த போர்ப் பதற்றம் இன்று மாலை 5 மணி முதல் முடிவுக்கு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த விளக்கத்தில், இந்தியா எந்தவொரு ... மேலும் பார்க்க

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக... மேலும் பார்க்க