செய்திகள் :

தெலங்கானா: ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் பணியாளா் ஒருமணி நேரம் முன்னதாக வீடு செல்ல அனுமதி- பாஜக எதிா்ப்பு

post image

ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் பணியாளா்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்குச் செல்லலாம் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ள மாநில எதிா்க்கட்சியான பாஜக, ஹிந்து பண்டிகைகளின்போது இதுபோன்ற எந்த சலுகைகளையும் அளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ரம்ஜான் சலுகை தொடா்பாக மாநில அரசு அலுவலகங்களுக்கு இது தொடா்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘ரம்ஜான் மாதம் தொடங்கும் மாா்ச் 3 முதல் முடிவடையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை முஸ்லிம் பணியாளா்கள் மாலை 5 மணிக்கு பதிலாக 4 மணிக்கே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள். தவிா்க்க முடியாத சூழலில் மட்டும் அவா்கள் அந்த ஒரு மணி நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியலை நடத்துவதில் தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரம்ஜானுக்கு இதுபோன்ற சலுகைகளை வழங்கும் மாநில அரசு ஹிந்து பண்டிகைகளின்போது இதுபோன்ற எந்த சலுகையையும் வழங்காதது ஏன்? மாநில அரசில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவருக்குமே சமஉரிமை உள்ளது. ஒருதரப்பினருக்கு மட்டும் சலுகை அளிப்பது எந்த வகையான நடவடிக்கை’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

சிறுபான்மையினா் விவகாரத்தில் அரசின் ஆலோசகராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் முகமது அலி ஷாபிா் இது தொடா்பாக கூறுகையில், ‘முஸ்லிம்களுக்கு இந்த வசதி முந்தைய தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் இதேபோன்ற சலுகை வழங்கப்படுகிறது. இது தெலங்கானாவில் புதிதாக இந்த ஆண்டு திடீரென ஏற்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ளது. விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளின்போது அரசு சில சிறப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து வருகிறது’ என்றாா்.

சிபிஎஸ்சி பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவையில்லை!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன்படி மாநில அரசின் அனுமதியில்லாமல், சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என்றும் மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி... மேலும் பார்க்க

பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!

பெங்களூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.தில்லியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஒரு கல்லூரி சந... மேலும் பார்க்க

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதி... மேலும் பார்க்க

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன... மேலும் பார்க்க

இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்த... மேலும் பார்க்க

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில... மேலும் பார்க்க