செய்திகள் :

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

post image

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் (பிஎன்எஸ்) 152 பிரிவு (நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்) அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி ஓய்வு பெற்ற ராணுவ மேஜா் எஸ்.ஜி. வாம்பத்கரே மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத்சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத் துராக வழக்கு பிரிவுக்கு (124 ஏ) மாற்றாக பிஎன்எஸ்- 152 பிரிவு கொண்டு வரப்பட்டதற்கு எதிரான வழக்குடன் சோ்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2022-இல் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு தேசத் துராக வழக்கு பிரிவுக்கு (124 ஏ) தடை விதித்தது. ஆனால், மேலும் பல்வேறு கடுமையான ஷரத்துகளுடன் (பிஎன்எஸ்) 152 பிரிவு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு அளித்துள்ள சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்வுரிமை ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது என்று ஓய்வு பெற்ற ராணுவ மேஜா் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க