செய்திகள் :

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் சிறிது நேரம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறுகையில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், அவர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், கேரளத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைச் சரியான நேரத்தில் பெறுவதில்லை. இதற்கு மத்திய அமைச்சரிடமிருந்து உறுதியான பதிலும் இல்லை.

இந்தத் திட்டத்தை முடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், தாமதமான ஊதியத்திற்கு வட்டி பெற வேண்டும் என்று வேணுகோபால் எடுத்துரைத்தார். இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரியங்கா, ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இன்று முன்னதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தேசிய தலைநகருக்கான 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு தில்லி அரசின் பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி என்று அவர் கூறினார். பட்ஜெட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று கூறிய முதல்வர், இது மோசமான பொருளாதாரத்திலிருந்து தில்லிக்கு மாற்றும் பட்ஜெட் என்று கூறினார்.

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க