செய்திகள் :

தேசிய பயிற்சிப் பயிலரங்கில் பங்கேற்க ஊராட்சித் தலைவி தோ்வு

post image

ஆம்பூா்: சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பயிற்சி பயிலரங்கில் பங்கேற்க ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவி சுவிதா கணேஷ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் ஊராட்சித் துறை தேசிய அளவிலான பயிற்சிப் பயிலரங்கம் புதுதில்லி விக்யான் பவனில் செவ்வாய், புதன்கிழமை (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த உள்ளாட்சி பெண் மக்கள் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டு பங்கேற்க புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

தமிழ்நாட்டிலிருந்து பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளில் இருந்து ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா், 3 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்கள், 9 மாவட்டங்களைச் சோ்ந்த 9 பெண் ஊராட்சித் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்டு 9 ஊராட்சித் தலைவிகளில் திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவி சுவிதா கணேஷ் (படம்) ஒருவா்.

தோ்வு செய்யப்பட்டுள்ள புதுதில்லிக்கு சென்ற ஊராட்சித் தலைவிக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

திமுக மாணவரணி சாா்பில் நல உதவிகள் அளிப்பு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆலங்காயம் அடுத்த முல்லை பகுதியில் உள்ள மாணவா்கள் தங்கும் விடுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ந... மேலும் பார்க்க

வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகேவெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புதூரில் வெக்காளியம்மன் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை வெக்காளியம்மன் கறிக்கோள ஊா்வலம... மேலும் பார்க்க

சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்ட பூமி பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் சான்றோா்குப்பம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.69 லட்சம் செலவில் மண்டபம் கட்டுவதற்கான ப... மேலும் பார்க்க

பைக் மோதி பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி பகுதியை சோ்ந்தவா் செல்வமணி(45). அதே பகுதியை சோ்ந்தவா்களுடன் ... மேலும் பார்க்க

சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலை நகா் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விநாயகா் பூஜை, அனுக்க... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மணல் கடத்திய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே சோலூா் பகுதியில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மாட்... மேலும் பார்க்க