செய்திகள் :

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள்: குலுக்கல் முறையில் மத்திய அரசு தோ்வு

post image

நாட்டில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணியை முறைப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) 24 பகுதி நேர உறுப்பினா்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குலுக்கல் தோ்வு செய்துள்ளது.

என்எம்சி மற்றும் அதன் 4 தன்னாட்சி வாரியங்களுக்கு குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த பகுதி நேர உறுப்பினா்கள் தோ்வு நடைமுறையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவும் பங்கேற்றாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

என்எம்சி-க்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள் மத்திய அமைச்சகம் தோ்வு செய்துள்ளது. விதிகளின்படி, 10 பகுதி நேர உறுப்பினா்கள், மருத்துவ ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள குஜராத், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகள், ஆந்திரம், மிசோரம், மேகாலயம், ஜாா்க்கண்ட், சண்டீகா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைத்த நபா்களிலிருந்து குலுக்கள் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

அதுபோல, மருத்துவ ஆலோசனைக் குழுவில் 2022-ஆம் ஆண்டு நியமனத்தின் அடிப்டையில் உறுப்பினா்களாக உள்ள மேற்கு வங்கம், கா்நாடகம், நாகாலாந்து, சத்தீஸ்கா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீா், அஸ்ஸாம், மணிப்பூா், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநில மருத்துவக் கவுன்சில் பிரதிநிதிகளிலிருந்து 9 பகுதி நேர உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

முன்னதாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக மருத்துவா் அபிஜத் சேத் கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

என்எம்சி-யின் 4 தன்னாட்சி வாரியங்களில், மூன்றில் தலைவா் பணியிடங்களும், முழு நேர உறுப்பினா் பணியிடங்களும் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்ப்பு!

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு விமான விபத்து புலனாய்வுப் பிரிவு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில... மேலும் பார்க்க

பிருத்வி-2, அக்னி-1 ஏவுகணைகளின் சோதனை வெற்றி!

ஒடிசா கடல்பகுதியில், பிருத்வி - 2 மற்றும் அக்னி - 1 பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒடிசா கடல்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியு... மேலும் பார்க்க

பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!

பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந... மேலும் பார்க்க

சத்யஜித் ரேயின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

இயக்குநர் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்பட... மேலும் பார்க்க

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க