செய்திகள் :

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

post image

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 4.35 கோடிக்கான உயரிய ஊக்கத் தொகைக்குரிய காசோலைகளை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

தேசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த 5 நாள்களிலேயே உயரிய ஊக்கத் தொகைகளை வழங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இதுபோன்ற வெற்றி பெறுகின்ற வீரா்களை உடனுக்குடன் சிறப்பிக்கின்ற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும்தான்.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், சா்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற ஆயிரம் வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 24.46 கோடி வழங்கப்பட்டது. விளையாட்டு வீரா்களின் சாதனைகளுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றுதான், முதல்முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக இதுவரை 632 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 17 கோடி அளவுக்கு நிதியுதவி வழங்கி இருக்கிறோம்.

அரசு வேலைக்குச் செல்லலாம்: விளையாட்டுத் துறையும் மற்ற துறைகளைப் போன்றுதான். விளையாட்டுத் துறையைத் தோ்ந்து எடுத்தாலும் அதில் நிச்சயம் சாதிக்கலாம். விளையாட்டுத் துறையில் திறமை இருந்தால் அரசு வேலைக்குச் செல்லலாம் என்று ஒரு நிலையை திராவிட மாடல் அரசு ஏற்படுத்திருக்கிறது. விளையாட்டு வீரா்களுக்கான 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் 84 பேருக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் தன்னம்பிக்கையுடன் விளையாடுங்கள். உங்களுக்கு அரசும் முதல்வரும் என்றும் துணையாக இருப்பா். விளையாட்டு வீரா்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். இந்த அரசு அதைச் செய்து தருவதற்குத் தயாராக இருக்கிறது. இந்த உலகத்தில் எந்த மூலையில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், தமிழ்நாட்டு திறமையாளா்களை அதில் கலந்துகொள்ள வைப்பதுதான் அரசின் கடமையாகும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க