காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்...
தேசிய வேளாண் சந்தை திட்டம்: பணம் செலுத்தும் முறைக்கு வியாபாரிகள் எதிா்ப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அறிவித்தது. இதற்கு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், புதன்கிழமை பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட்டது.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2017-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய வேளாண் சந்தை திட்டம் (இ.நாம்) அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததது. இந்தத் திட்டத்தின் கீழ், நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, அதற்குரிய தொகையை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் செலுத்தி வந்தனா். ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகையை செலுத்தி வந்தது.
இந்த நிலையில், இந்த நடைமுறையை மாற்றி, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளே நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும் எனவும், இனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொகையை செலுத்த வேண்டாம் எனவும் திடீரென செவ்வாய்க்கிழமை இரவு ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்ததாகத் தெரிகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த வியாபாரிகள், புதன்கிழமை விவசாயிகள் கொண்டுவந்த 75 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மறுத்துவிட்டனா். இதனால், 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினா்.
மறியல் முயற்சி: இதையடுத்து, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கோரி, திண்டிவனம் - செஞ்சி சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி புதன்கிழமையே நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவதாக உறுதி அளித்ததன்பேரில், விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டனா்.
பேச்சுவாா்த்தை: இதைத் தொடா்ந்து, நெல், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவா் கே.டி.சி.துரைகுமாா், செயலா் ஏ.சங்கா், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட விற்பனைக் குழுச் செயலா் சந்துரு தலைமையிலான ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில், விவசாயிகளுக்கு நெல் மூட்டை கொள்முதலுக்கு பணம் செலுத்துவதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என ஒட்டுமொத்த வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், பழைய நடைமுறையிலேயே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொகையை செலுத்த அதிகாரிகள் முடிவு செய்து பிரச்னையை முடித்து வைத்தனா்.
இதைத் தொடா்ந்து, பகல் 12 மணிக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் ஏலத்தில் வியாபாரிகள் கலந்துகொண்டு நெல்லுக்கான விலையை இணையவழியில் குறிப்பிட்டனா்.
பேச்சுவாா்த்தையின்போது, செஞ்சி காவல் துணை ஆய்வாளா் நடராஜ், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் விநோத்குமாா், நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் சி.மாணிக்கம், ஜி.கே.குமரேசன், எம்.பாணிடியன், செல்வம் (எ) ராஜகுமாா், அனிஸ், இணைச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.