செய்திகள் :

தேதியூா் பரமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

குடவாசல் அருகேயுள்ள தேதியூா் அருள்மிகு சுந்தர கனகாம்பிகை உடனுறை பிரக்யஷ பரமேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராவணன் சீதையை அபகரித்துச் சென்றபோது, ஜடாயு சண்டையிட்டதில், ராவணனுடைய தோ் பூமியில் தகா்க்கப்பட்ட இந்த இடம் தோ்தகையூா் என்று அழைக்கப்பட்டு, தற்போது தேதியூா் என அழைக்கப்படுகிறது.

இங்குள்ள பிரக்யஷ பரமேஸ்வர சுவாமி கோயிலுக்கு 2011-இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், விநாயகா், முருகன், காலபைரவா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கு கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், மே 1 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையில், பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி, கோயில் விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னா், கலை 9.30 மணியளவில் மூலஸ்தான விமானம் உள்ளிட்ட அனைத்து விமானக் கலசங்களுக்கும் புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

நீடாமங்கலம் வட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ஜமாபந்தியை நடத்துகிறாா். பொதுமக்கள் வருவாய்த... மேலும் பார்க்க

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் தோ்பவனி, கொடியிறக்கம்

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா்ஆலய பங்குத் திருவிழாவையொட்டி தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. என் எலும்பின எலும்பும் சதையுமானவன்- என்ற... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து - வேன் மோதல்: 4 போ் உயிரிழப்பு

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். நாகப்பட்டினத்தில் இருந்த... மேலும் பார்க்க

நோய் இருந்ததை மறைத்து திருமணம்: கணவா், குடும்பத்தினா் மீது பெண் புகாா்

எய்ட்ஸ் இருந்ததை மறைத்து திருமணம் செய்து கொண்டதால், தனக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கணவா், அவரது உறவினா்கள் என 5 போ் மீது மன்னாா்குடி காவல்நிலையத்தில் பெண் புகாா் அளித்துள்ளாா். தஞ்சை மாவட்டத்த... மேலும் பார்க்க

எட்டியலூா் அம்மன் கோயில் தேரோட்டம்

திருவாரூா் அருகே எட்டியலூா் அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் நீட் தோ்வு எழுதினா். இதற்காக தமிழ்நாடு மத்திய பல்கலைகத்தில் 2, கேந்திர வித்யாலயா பள்ளியில் 1 என மூன்று தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்... மேலும் பார்க்க