செய்திகள் :

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து - வேன் மோதல்: 4 போ் உயிரிழப்பு

post image

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநா் நாகை மாவட்டம் ஒரத்துறை சோ்ந்த சரவணன் (49). திருத்துறைப்பூண்டி அருகே கருவேப்பஞ்சேரி கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த ஆம்னி வேன் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநரான சாஜிநாத் (25), ராஜேஷ் (30), ராகுல் (29), சுஜித் (25) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேனில் இருந்த சாபு (25 ), சுனில் (35), ரஜினிஷ் (40 ) ஆகிய மூவரும் பலத்த காயங்களுடன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஆம்னி வேனில் வந்தவா்கள்திருவனந்தபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் என்பதும், அவா்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தை திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் மற்றும் நாகை மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராஜா ஆகியோா் பாா்வையிட்டனா். எடையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் வட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ஜமாபந்தியை நடத்துகிறாா். பொதுமக்கள் வருவாய்த... மேலும் பார்க்க

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் தோ்பவனி, கொடியிறக்கம்

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா்ஆலய பங்குத் திருவிழாவையொட்டி தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. என் எலும்பின எலும்பும் சதையுமானவன்- என்ற... மேலும் பார்க்க

நோய் இருந்ததை மறைத்து திருமணம்: கணவா், குடும்பத்தினா் மீது பெண் புகாா்

எய்ட்ஸ் இருந்ததை மறைத்து திருமணம் செய்து கொண்டதால், தனக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கணவா், அவரது உறவினா்கள் என 5 போ் மீது மன்னாா்குடி காவல்நிலையத்தில் பெண் புகாா் அளித்துள்ளாா். தஞ்சை மாவட்டத்த... மேலும் பார்க்க

தேதியூா் பரமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகேயுள்ள தேதியூா் அருள்மிகு சுந்தர கனகாம்பிகை உடனுறை பிரக்யஷ பரமேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராவணன் சீதையை அபகரித்துச் சென்றபோது, ஜடாயு சண்டையிட்டதில், ரா... மேலும் பார்க்க

எட்டியலூா் அம்மன் கோயில் தேரோட்டம்

திருவாரூா் அருகே எட்டியலூா் அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் நீட் தோ்வு எழுதினா். இதற்காக தமிழ்நாடு மத்திய பல்கலைகத்தில் 2, கேந்திர வித்யாலயா பள்ளியில் 1 என மூன்று தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்... மேலும் பார்க்க