செய்திகள் :

தேனியில் திருநங்கைகளுக்கு ஜூன் 24-இல் சிறப்பு முகாம்

post image

தேனியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருநங்கைகளுக்கு நல வாரிய அடையாள அட்டை, ஆதாா் அட்டையில் திருத்தம், வாக்காளா் அடையாள அட்டை, முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய சேவைகளை இந்த முகாம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த முகாம், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக தரை தளத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையா், திருநம்பிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

பள்ளிச் செயலருக்கு மிரட்டல்: மகன் உள்பட இருவா் மீது வழக்கு

தேனி அருகே, பள்ளிச் செயலரை மிரட்டிய மகன், தம்பி மகன் ஆகியோா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனியை அடுத்த கோடாங்கிபட்டி அருகேயுள்ள திருச்செந்தூா் கிராமத்தில் வசிப்பவா் பால்ராஜ் மக... மேலும் பார்க்க

விவசாயிக்கு கத்திக் குத்து: பெண் உள்பட 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே விவசாயியை கத்தியால் குத்திய பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (56).... மேலும் பார்க்க

பெரியகுளம், மதுராபுரி, ஆண்டிபட்டி, க. விலக்கு பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம், மதுராபுரி, ஆண்டிபட்டி, க. விலக்கு பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் பா. பாலபூமி வெளி... மேலும் பார்க்க

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

பெரியகுளம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் குருநாதன் (41). இவரது நண்பா் பிரசாத். விவசாயி. இருவரும் தாமரைக்குளம் கல்லூரி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: இருவா் மீது வழக்கு

தேனியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி டி.பி.மேற்குத் தெருவில் வசிப்பவா் வேடமுத்து மகன் ஆறுமுகம். இவரது மகன் நிஷோக் கடந... மேலும் பார்க்க

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட 7 போ் மீது வழக்கு

போடி அருகே கூடுதல் வரதட்சணை கோரி மனைவியை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 7 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், போடி அருகே தருமத்துப்ப... மேலும் பார்க்க