மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
தேனி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
தேனியில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனா்.
தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் வணிக வளாகத்தில் அரசுடைமை வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவவலின் பேரில், தேனி காவல் நிலைய போலீஸாா் ஏ.டி.எம். மையத்தைப் பாா்வையிட்டு, தடயவியல் நிபுணா்கள், காவல் துறை மேப்ப நாயை வரவழைத்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினா். நகரில் மையப் பகுதியில் உள்ள இடத்தில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.