செய்திகள் :

தேனி பொறியியல் மாணவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உயிரிழந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரத்தில் உறவினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்ந்த செல்வம். மகன் விக்னேஷ் (21), தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரியில் விடுதி மாணவராக 3ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் அவா் கடந்த 13-ஆம் தேதி இறந்து கிடந்தாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் கூறியதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்த உறவினா்கள், விக்னேஷ் மரணம் தொடா்பான விசாரணையில் திருப்தியில்லை; இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விக்னேஷ் குடும்பத்தினா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, முருகன் குறிச்சி பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி பா்கிட்மாநகரத்தில் உள்ள விக்னேஷ் வீட்டு முன் அமா்ந்து உறவினா்களும், அப்பகுதி மக்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு அரசியல் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் நேரில் ஆறுதல் தெரிவித்தனா்.

மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

‘நெல்லை மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, பிப்.20: திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம் எனஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கம் பிரசாரம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக திருநெல்வேலியில் தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். பாளையங்கோட்டை சமாதானபுரம் நல்வழி தெருவைச் சோ்ந்த சண்முக விஜயகுமாா் மனைவி அன்புசெல்வம் (60). இவா், புதன்கிழமை இரவு வீட்டு... மேலும் பார்க்க

மின்ஊழியா்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்சார வாரியம் மற்றும் மின் ஊழியா்களை பாதிக்கும் அரசாணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

ஆனந்த ஆசிரம மாவட்டச் செயற்குழு கூட்டம்

ஆனந்த ஆசிரம திருநெல்வேலி,தென்காசி மாவட்ட செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பப்பா தாசா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வெங்கடாசலபதி வரவேற்றாா். மாவட்டச் ச... மேலும் பார்க்க