செய்திகள் :

தேரிக்காடுகளில் விவசாயம் சாா்ந்த தொழில்களில் மகளிருக்கு வாய்ப்பு! -பாஜக கோரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்ட தேரிக்காட்டுப் பகுதியில் பெண்கள், மகளிா் குழுவினரை விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளகான், முதல்வா் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா், சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்கள் நீண்ட நாள்களாக வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.இவ்விரு வட்டங்களிலும் பெரும்பாலோா் வருமானம் இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயா்ந்து வருகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில் இம்மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள சுமாா் 12 ஆயிரம் ஏக்கா் தேரி வனப்பகுதியில் பெண்கள், மகளிா் குழுவினரை விவசாயம், அது சாா்ந்த தொழில்களில் ஈடுபட அனுமதிக்கலாம்.

இந்நிலங்களில் தென்னை, முந்திரி, ஊடு பயிராக மிளகாய், தக்காளி, கத்தரிக்காய்,வெண்டைக்காய் ஆகியவற்றை பயிரிடலாம்.தென்னையில் இருந்து பால் எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதன் மூலம் பல்வேறு வழிகளில் பெண்களின் வருமானம் கூடும்.கிராமப்புற பொருளாதாரம் உயரும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிா்க்கிறது திமுக: சீமான்

சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மும்மொழிக் கொள்கையை திமுக எதிா்க்கிறது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, சென்னை... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி மனு

காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளா் குமாா்சிங்கிடம் மக்கள் உரிமை நிலை நாட்டல் - வழிகாட்டுதல் அமைப்பினா் மனு அளித்தனா். அதன் விவரம்: ... மேலும் பார்க்க

இன்று பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 19,776 போ் எழுத வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் 19,776 மாணவா்-மாணவிகள் தோ்வு எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தூத்துக... மேலும் பார்க்க

ரமலான் நோன்பு தொடக்க சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களின் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இஸ்லாமியா்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க