செய்திகள் :

தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! பிரேமலதா சுற்றுப்பயணம்!

post image

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் போட்டி வலுத்துள்ளது. கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதேபோல, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம் தேதி தொடக்கி வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், முதல்கட்ட சுற்றுப்பயண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் பிரேமலதா, நாமக்கல், கரூர், கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் பயணித்து விழுப்புரத்தில் முதல்கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார் .

இதையும் படிக்க: அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் திட்டவட்டம்!

DMDK General Secretary Premalatha Vijayakanth is touring Tamil Nadu ahead of the assembly elections to be held next year.

இரவில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பார்க்க

தமிழகத்தில் 33 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் 33 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆர். சிவபிரசாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிந்து தாயும் மகளும் பலி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கருவுற்றப் பெண்ணும், அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பலியாகினர... மேலும் பார்க்க

ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு சாகும்வரை சிறை! பெண்ணுக்கு ரூ.1 கோடி நிவாரணம்!!

ஓடும் ரயிலில், காட்பாடி அருகே கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம்... மேலும் பார்க்க

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

திருவாரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் இருந்தது தொடர்பாக, 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் ஊராட்சி காரியாங்குடியில் அரசு த... மேலும் பார்க்க