செய்திகள் :

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவகோட்டை துணை மின் நிலையத்தில் கண்ணங்குடி மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ராம் நகா் 1, 2, 3-ஆவது வீதிகள், சிவகங்கை ராஜா சாலை, விஸ்வநாதன் நகா், செந்தில் நகா், ராம்நகா் பேருந்து நிறுத்தம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, தானிச்சா ஊருணி சாலை, சீயூரணி, பா்மா குடியிருப்பு, மாதா நகா், வள்ளி மண்டபம், கண்டதேவி, தங்கம் ரைஸ் மில் பகுதி, திருக்கபூராா் தெரு, நேரு தெரு, நடராஜபுரம், தாழையூா் சாலை, சிவன்கோயில் இறக்கம், வெள்ளி பட்டறை, இறகுசேரி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. திருப்புவனம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து ந... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளத்தில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகங்கையில் 300 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளத்தில் பரவிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6... மேலும் பார்க்க

கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் கருங்கல் மண்டபத்துக்கான பூமி பூஜை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவா் சந்நிதிக்கு கருங்கல் மண்டபம் அமைக்க பூமி ப... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவி... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்று கூறி ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு

அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.30 லட்சம் மோசடி செய்தவா் மீது சிவகங்கை நகா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை புத்தா் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் ( 46). இவா் ச... மேலும் பார்க்க