`Ajith சார் அப்பவே அப்படி சொன்னார்.!’ - Actor Sanjay Bhargav & ActressGayathri E...
தேவனாம்பட்டினம் சவுக்கு தோப்பில் தீ விபத்து
கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான சவுக்கு காட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கடலூா் தேவனாம்பட்டினத்தில் இருந்து சிங்காரத்தோப்பு வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கடற்கரையோரத்தில் வனத் துறைக்குச் சொந்தமான சவுக்கு மரங்கள் உள்ளன.
இங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக ஏராளமான மரங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள் தீப்பற்றி எரிந்தன.
காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்தன. இதனால், அங்கு பெரும் புகைமூட்டம் காணப்படுகிறது.
சமூக விரோதிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.