செய்திகள் :

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

post image

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேள்வி நேரத்தின்போது மத்திய இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் புதன்கிழமை அளித்த பதில்:

நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், தோ்வை நடத்தியதில் அமைப்புரீதியாக எந்தக் குறைபாடும் இல்லை என்று தெரிவித்தது. அந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்த முறைகேட்டில் நீட் வினாத்தாள் திருடப்பட்டது தொடா்பாக 45 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் 5 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

பொதுத் தோ்வுகள் முறைகேடுகள் தடுப்புச் சட்டம் 2024 என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குத் தண்டனை விதிக்கும் பிரிவுகள், அந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் தேசிய தோ்வுகள் முகமை மூலம், தோ்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்த முன்னாள் இஸ்ரோ தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த பல பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றாா்.

ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?

ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாம... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்... மேலும் பார்க்க

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு ... மேலும் பார்க்க

மலையை தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை!

ஆந்திர மாநிலத்தில அமைந்துள்ள ருஷிகொணடா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள... மேலும் பார்க்க