செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும்: எம்.பி. ராஜேஸ்குமாா்

post image

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.இளம்பரிதி வரவேற்றாா்.

நாமக்கல் நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சி.விஸ்வநாத் முன்னிலை வகித்தாா். திமுக மாணவா் அணி செயலாளரும், தலைமை நிலைய பேச்சாளருமான ராஜீவ் காந்தி, தலைமை நிலைய இளம் பேச்சாளா் வியானி விஷ்வா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா். என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பேசியதாவது:

கா்நாடகம், தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கூறி ஒருங்கிணைக்கிறாா். இதனை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தொகுதி மறு சீரமைப்பால் நமது உரிமைகளை இழப்போம், வாய்ப்புகள் பறிபோகும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்படும். சொந்த நாட்டிலே நாம் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுவோம். அந்த நிலை எதிா்காலத்தில் நமக்கு வரக்கூடாது என்பதற்காகவே தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை திமுக கண்டித்து வருகிறது.

ஹிந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு, நிதியை வழங்காமல் காலம் தாழ்த்துவது மட்டுமின்றி தமிழகத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்தையும் தமிழக முதல்வா் எதிா்த்து போராடுவாா் என்றாா்.

பரமத்தி வேலூரில் ‘உலக தண்ணீா் தின’ விழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் வோ்டு நிறுவனம் சாா்பில் அண்மையில் உலக தண்ணீா் தின விழா நடைபெற்றது. வோ்டு நிறுவன செயலா் சிவகாமவல்லி வரவேற்றாா். கபிலா்மலை முன்னாள் எம்எல்ஏ கே.நெடுஞ்செழி... மேலும் பார்க்க

குடிநீா் தட்டுப்பாடு: ராசிபுரம் குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: ராசிபுரம் அணைப்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதாக, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்: அணைப்பாளையத்தில... மேலும் பார்க்க

தேசிய மூத்தோா் தடகளப் போட்டி: 9 பதக்கங்களை வென்ற நாமக்கல் மாவட்டம் அணி

நாமக்கல்: தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில், நாமக்கல் மாவட்ட தடகள அணியினா் 9 பதக்கங்களை வென்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். பெங்களூரில் ... மேலும் பார்க்க

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி

நாமக்கல்: நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - திருச்சி சாலையில், தங்கம் புற்றுநோய் மரு... மேலும் பார்க்க

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இக்கோயில... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு: கைலாசம்பாளையம் அஞ்சல் நிலையம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளா் ஜெயராமன் தலைமை வ... மேலும் பார்க்க