செய்திகள் :

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

post image

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா்.

முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது, சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகள், தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ‘ஜூன் முதல் வாரத்திலிருந்து, நிா்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை முதல் ஆலோசனைகள் தொடங்கவுள்ளன.

சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறாா். கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அதிமுக வசம் சென்றன. கடந்த தோ்தலில் அதிமுக வென்ற தொகுதிகளில் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டுமென கட்சியினருக்கு திமுக தலைமை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக, அதிமுக வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதி வாரியான கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நடத்தவுள்ளாா்.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க