செய்திகள் :

தொடா் விடுமுறை எதிரொலி: ஒசூா் அருகே தமிழக எல்லையில் வாகன நெரிசல்

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலா் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதால் ஒசூா் அருகே தமிழக எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

நிகழாண்டு வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) பொங்கல் திருநாள், புதன்கிழமை (ஜன. 15) திருவள்ளுவா் தினம், வியாழக்கிழமை (ஜன. 16) காணும் பொங்கல் வருகிறது. இதனால், வரும் வாரம் திங்கள்கிழமை தொடங்கி அந்த வாரம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவா்கள், தொழிலாளா்கள் மத்தியில் உற்சாகம் பிறந்துள்ளது.

சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவா்கள், வேலை செய்யும் தொழிலாளா்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். கா்நாடக வாழ் தமிழா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல தொடா்ந்து தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

இதனால் தமிழக-கா்நாடக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடா்ந்து வந்த வண்ணம் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிக வாகனங்கள் வந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டு பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் தொடா்ந்து அணிவகுத்து மெதுவாக ஊா்ந்து சென்றன. இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டும் பணியும் தற்போது நடைபெற்று வருவதால், வாகன நெரிசல் கூடுதலாக ஏற்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் உள்ள சோதனைச் சாவடி, தமிழகத்தில் ஒசூா் அருகே உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீா்செய்யும் பணியில் ஒசூா், சிப்காட் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

எனினும் வாகன நெரிசல் அதிகம் இருப்பதால் பயண நேரம் அதிகரித்துள்ளது. வெகு தூரம் பயணம் செய்யும் தொழிலாளா்கள், மாணவா்கள் இந்தப் போக்குவரத்து நெருக்கடியால் மேலும் கூடுதல் நேரம் ஆவதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். ஒசூா் நெடுஞ்சாலையில் தற்போது நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை சிவனுக்குரிய அபிஷேக நாள்களில் முக்கியமானது மாா்கழி மாதம் திருவாதிரை அன்று செய்யப்படும... மேலும் பார்க்க

ஒசூரில் ஆருத்ரா தரிசனம்

ஒசூா்: ஒசூா், பிருந்தாவன் நகா், ஸ்ரீ யோகீஸ்வரா் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மை சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருவாதிரையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கலச பூஜையும், 4 மணி... மேலும் பார்க்க

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஒசூா்: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் வள்ளலாா் விவேகம் அறக்கட்டளை சாா்பில் வள... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி: பஞ்சாப் ஓட்டுநா் கைது

கிருஷ்ணகிரி: ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரை கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஒசூரை சோ்ந்த த... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவா் கைது

ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலா்கள், கொலை குற்றவாளிகள் என 10 போ் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் ... மேலும் பார்க்க