செய்திகள் :

தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பு? விஜய் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

post image

பொதுக் கூட்டங்களின் போது உயரமான இடங்களில் ஏறும் தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது என்று தவெக தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை திருச்சியில் தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

திருச்சியில் நடைபெற்ற தவெகவின் கூட்டத்துக்கு மாநகர காவல்துறையினர் 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தனர்.

அடுத்தடுத்து, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், தொண்டர்கள் உயரமாக இடங்களில் ஏறி கீழே விழுந்தால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை கட்சித் தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, விஜய் பிரசாரத்துக்கு நிறைவேற்ற இயலாத, பிற கட்சிகளுக்கு இல்லாத வகையில் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான நிபந்தனைகளை வகுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கூட்டங்களில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக குறிப்பிட்ட தொகையை முன்வைப்புத் தொகை பெறும் வகையில் நிபந்தனைகளை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சியில் சேதமடைந்த பொதுச் சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Chennai HC ordered the Tamil Nadu Police to formulate common conditions that would apply to all parties.

இதையும் படிக்க : ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர ஓய்வூதியத்தை ரூ.22,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,0... மேலும் பார்க்க

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்துக்கான பிரச்னையிலேயே அக்கட்சியினர் திணறுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்துக்கு அனுமதி வழங்குவதி... மேலும் பார்க்க

திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது: கமல்ஹாசன்

திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது, அதற்கும் மேல் புனிதமானது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக... மேலும் பார்க்க

2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! - நீதிமன்றத்தில் தகவல்

வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்பட்ட பகுதியில் புது மண்டபத்தில் இ... மேலும் பார்க்க

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. செப். 18ல் தமிழக... மேலும் பார்க்க

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் அமலா... மேலும் பார்க்க