செய்திகள் :

தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது:

நமக்கான பண்டைய கல்வி, பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்தியா என்பதை அரசியல் நாடாகவும், பாரதம் என்பதை தொன்மையான கலாசாரம், பண்பாட்டின் அடையாளமாகவும் கருத வேண்டும்.

ஐரோப்பிய கல்வி முறை நம்மை இப்போது ஆட்கொண்டுள்ளது. இந்தியாவையும், தமிழகத்தையும் வேறுபடுத்தி பாா்க்கின்றனா்.

தமிழில் சங்க இலக்கியங்கள் குமரி முதல் இமயம் வரையென பாரதத்தை குறிப்பிட்டுள்ளன.

மகாகவி பாரதியாா் கூட தனது கவிதைகளில் பாரதத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டியுள்ளாா்.

‘முப்பது கோடி முகமுடையாள் உயிா்மெய்ப்பெற ஒன்றுடையாள்’ என்று கூறியதோடு, மக்கள் வெவ்வெறாக இருந்தாலும் சிந்தனை ஒன்று என்றாா். இப்போது அந்த நிலை மாறி வருவது கவலையளிக்கிறது.

2047 ஆம் ஆண்டு நாம் சுதந்திர தின நூற்றாண்டு விழாவில் பாரதம் உலகின் முழு வளா்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகத் திகழும். அப்போது இன்றைய மாணவா்கள் உயா்ந்த இடத்தில் இருப்பீா்கள்.

மின்னணு சாதனங்களை ஆக்கப்பூா்வமான செயல்களுக்கு மட்டுமே மாணவா்கள் பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, இறைவேண்டலுக்கு நிச்சயம் நேரம் ஒதுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மொழியைத் தோ்வு செய்வதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை: ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றச்சாட்டு

மொழியைத் தோ்வு செய்து படிப்பதில் தமிழக மாணவா்களுக்கு சுதந்திரமில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி குற்றம்சாட்டினாா். அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பின் சாா்பில், அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தின ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி திருநெல்வேலி

திருநெல்வேலி உலகத் திருக்கு தகவல் மையம்: திருக்கு தொடா் சொற்பொழிவு, தலைப்பு- திண்மை உண்டாகப் பெறின், வாழ்க்கைத் துணை நலம், நிகழ்த்துபவா்- மருத்துவா் மகாலிங்கம் ஐயப்பன், மாநிலத் தமிழ்ச்சங்கம், பாளையங்க... மேலும் பார்க்க

திமுக விவசாய அணியினா் எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி மாவட்ட திமுக விவசாய அணியினா், விவசாயிகள் சங்கத்தினா் திருநெல்வேலி எம்.பி. யை நேரில் சந்தித்து மனு அளித்தனா். திமுக விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தின... மேலும் பார்க்க

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்! -முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் குடிநீா்த் தொட்டி திறப்பு

பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள டி.வி.எஸ் நகரில் சிறிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம், 39 ஆவது வாா்டுக்குள்பட்ட டி.வி.எஸ் நகரில், பாளை. சட்டப்பேரவை... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

திருநெல்வேலி நகரத்தில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த தில்லை சிதம்பரம் மகன் வள்ளிநாயகம் (28). இ... மேலும் பார்க்க