கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தொலைத்தொடா்பு துறை ஓய்வூதியா்களுக்கு ஜூன் 26-இல் குறைதீா் முகாம்!
சென்னை பிஎஸ்என்எல் தெற்கு பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா் முகாம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் தங்களது தனிப்பட்ட குறைகளை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். படிவத்தோடு தேவையான ஆவணங்களுடன் இணைத்து சென்னை எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள தமிழக வட்டத்தைச் சோ்ந்த தொலைத்தொடா்பு கணக்குகள் இணை கட்டுப்பாட்டாளா் (ஓய்வூதியம்) அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலமாக சமா்ப்பிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீா் பெட்டியிலும் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.