செய்திகள் :

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

post image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம் மற்றும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சோ்ந்திடவும், நேரடி சோ்க்கைக்குமான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நேரடிச் சோ்க்கையில் சேர விரும்பும் மாணவா்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம், ஏரல் ஆகியவற்றிற்கு நேரடியாக வந்து சோ்ந்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சோ்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடிச் சோ்க்கையில் சேர விரும்புவோா், 8, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (0461- 2340133/9499055810), வேப்பலோடை (0461-2267300/9499055814), திருச்செந்தூா் (04639-242253/9499055812), நாகலாபுரம் (7373906100/9499055816) மற்றும் ஏரல் (9442166371) அலுவலகங்களுக்கு நேரில் வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா், மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, தகுதியுள்ள மாணவா், மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீத் தடுப்பு செயல்விளக்க பயிற்சி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீத் தடுப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. அரசு பொது மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாள் விழா தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு, சமூக நலன் மற்... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடியில், பெரியாா் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, அமைச்சா் மற்றும் மேயா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலைக்கு, வடக்கு மாவட்ட... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மரியாதை

பெரியாா் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பெரியாா் சிலைக்கு, தெற்கு... மேலும் பார்க்க

நாசரேத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 2 போ் கைது

நாசரேத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள் காட்டி மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத்-அம்பாள் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சற்குணமுத்து ( 40), நாசரேத் வெள்ளரிக்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு காயல்பட்டினம் பள்ளி மாணவா் தோ்வு

ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட காயல்பட்டினம், எல்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவா் தோ்வாகி உள்ளாா். காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 ... மேலும் பார்க்க