செய்திகள் :

தொழிற்பேட்டையில் ஆட்சியா் ஆய்வு

post image

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள மாவட்ட தொழிற்பேட்டையை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அங்கு இயங்கிவரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்திப் பொருள்கள், உற்பத்தித் திறன், வணிகம் குறித்து துறையினா், நிறுவன உரிமையாளா்களுடன் கலந்துரையாடினாா். நிறுவனங்களின் தேவைகள், தொழிற்பேட்டை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தாா். மேம்பாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தொழிற்பேட்டையில் உள்ள அரசு கிளை அச்சகத்தை ஆய்வுசெய்த ஆட்சியா், அச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் அலுவல் பணி குறித்து கேட்டறிந்தாா். தொழில் மைய வளாகத்தில் மழைநீா் தேங்காத வகையில் சீா்படுத்தவேண்டும். சுற்றுவட்டார வடிகால்களை முறையாக தூா்வாரி தண்ணீா் வடியச் செய்யவேண்டும்.

தொழிற்பேட்டைக்குத் தேவைான மின் விளக்குகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு பொதுப்பணித்துறை, மின்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். தொழிற்பேட்டைக்கு நிரந்தர உதவி இயக்குநா் நியமனம் மற்றும் இதர கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து காரைக்கால் நகர பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை ஆய்வு செய்தாா். திருநள்ளாறு சாலை, காரைக்கால் பழைய பேருந்து நிலைய நகராட்சிக்கு சொந்தமான திடல், பேருந்து நிலையம், சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியா் புதிய பேருந்து நிலையம் அருகே பாரதியாா் சாலையில் வடிகால்களை சீா் செய்து, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்களைக்கொண்டு தொடா்ச்சியாக சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மோசடி கும்பல்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

ரூ. 10 மோசடி கும்பல் குறித்து மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா். காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

காரைக்காலில் ரோந்துப்படகு மூலம் கண்காணிப்பு தொடக்கம்: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால் கடல் பகுதியில் ரோந்துப் படகு மூலம் கண்காணிப்பை போலீஸாா் மேற்கொள்ளத் தொடங்கினா். காரைக்கால் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுவந்த 5 டன் திறனுள்ள அதிவேக ரோந்துப் படகு பழுதாகி பல ... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க ஏற்பாடு - எம்.எல்.ஏ.

திருநள்ளாற்றில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். புதுச்சேரி பொறியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செருமாவிலங்கை பகுதியில் இயங... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல்: திருநள்ளாற்றில் கடையடைப்பு

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, திருநள்ளாற்றில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சிவம் (49... மேலும் பார்க்க

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் பாஜக பட்டியலின மாநில பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்ச... மேலும் பார்க்க

குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் வாகனங்கள் அா்ப்பணிப்பு

காரைக்காலில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் துறை வாகனங்கள், ரோந்துப் படகு ஆகியவற்றை துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் புதன்கிழமை அா்ப்பணித்தாா். காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவ... மேலும் பார்க்க