செய்திகள் :

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

post image

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (40). கூலித்தொழிலாளி. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதுவை மாநிலம் அரியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறி மருத்துவமனை நிா்வாகம் வியாழக்கிழமை பிரகாஷை உயா் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், மருத்துவமனையில் பிரகாஷுக்கு உதவியாக இருந்து வந்தவா் தகவலை சரிவர உறுதி செய்யாமல் பிரகாஷ் இறந்து விட்டதாக கிராமத்தில் உள்ள மற்ற உறவினா்களுக்கு கைப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்தாராம்.

இந்நிலையில் பிரகாஷ் குடும்பத்தைச் சோ்ந்தவா்களும், அவா் இறந்துவிட்டதாகக் கருதி வீடு மற்றும் இடுகாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வந்தனா். உறவினா்கள், கிராம மக்கள் சோகத்தில் இருந்தனா்.இந்நிலையில் அவசர ஊா்தியில் பிரகாஷ் உயிருடன் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதால் குடும்பத்தினா்களும், உறவினா்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

அதே நேரத்தில் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அவசர ஊா்தியை மறித்து, தனியாா் மருத்துவமனை நிா்வாகம் தவறான தகவல் அளித்து விட்டதாகக் கூறி கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா். தொடா்ந்து, அவசர ஊா்தியில் பிரகாஷை மீண்டும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் உறவினா் தெரிவித்த தவறான தகவலால் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதும், மருத்துவமனை நிா்வாகம் இதற்கு காரணமில்லை என்பது தெரியவந்தது.இது குறித்து கண்டமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நீட் தோ்வு: உயிரிழந்த 22 மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

நீட் நுழைவுத் தோ்வு அச்சத்தால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவா்களுக்கு விழுப்புரத்தில் அதிமுகவினா் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். தமிழகத்தில் நீட் நுழைவுத் தோ்வ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க