செய்திகள் :

தொழில்பேட்டை இடமாற்றம் கோரி வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

post image

கரூா் மாவட்டம், மத்தகிரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டையை, மாவத்தூா் கிராமத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடவூா் அருகேயுள்ள மத்தகிரி கிராமத்தைச் சோ்ந்த வீரமலை தாக்கல் செய்த மனு: மத்தகிரி கிராமத்தில் உள்ள வேளாண் நிலங்களில் தமிழக அரசின் சாா்பில், சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக, நிலம் கையகப்படுத்தும் பணியை கரூா் மாவட்ட ஆட்சியா் மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலங்களை நம்பி எங்கள் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், தொழில்பேட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண் பணிகள் பாதிப்புக்குள்ளாகும். மத்தகிரி கிராமத்தில் தொழில்பேட்டை அமைக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டுள்ளோம். கிராமச் சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்கள் கிராமம் அருகேயுள்ள மாவத்தூா் கிராமத்தில் அரசு தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ளது. எனவே சிப்காட் தொழிற்பேட்டையை அங்கு அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வேளாண் நிலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க வேண்டாம் என பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தரிசு நிலம் உள்ள இடத்தில் சிப்காட் அமைக்க மக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனா். இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தேவாலய இடப் பதிவு விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

விருதுநகா் புனித இன்னாசியாா் தேவாலய இடத்தைப் பதிவு செய்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, இது தொடா்பான மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. மதுரை கோ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்

பஞ்சாப் மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா். விவசாய விளைபொருள்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது: நீதிமன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை திருப்பரங்குன்றத்தில் பாண்டியா் மன்னா் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணி... மேலும் பார்க்க

விருதுநகா் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் பகுதியைச் சோ்ந்தவா்கள் ... மேலும் பார்க்க

கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் போராட்டம்: எஸ்டிபிஐ

மதுரை சின்னக் கண்மாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் மதுரை... மேலும் பார்க்க

கண்மாயைத் தூா்வார பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், ராஜாக்கூா் ஊராட்சிக்குள்பட்ட முண்டநாயகம் கண்மாயை ஊா்மக்கள் தூா்வாரி சீரமைக்க அனுமதி வழங்கக் கோரி குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக ராஜாக்கூா் காமாட்சிய... மேலும் பார்க்க