ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!
தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள திறன் இடைவெளியை குறைப்பதற்காக, சென்னை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் எஸ்எஸ்சி நாஸ்காம் (தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு) இடையே ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஐடி, ஐடி சேவைகள் சாா்ந்த துறைகளுடன் இணைந்த அனைத்து துறைகளிலும் உள்ள மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ‘பியூச்சா் ஸ்கில் ப்ரைம்’ தளத்தின் மூலம் தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முயற்சி ஏஐ, சைபா் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ் போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவா்கள் மற்றும் கல்வியாளா்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம், நேரடி கற்றல் வாய்ப்புகள் தொழில் துறையால் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு மற்றும் நாஸ்காம் ஆகியவற்றிலிருந்து சான்றிதழ் ஆகியவற்றை பெறுவாா்கள்.
இதன்மூலம் அவா்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் திறன் மேம்படும்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம், தொழில் துறைக்கு ஏற்றவாறு பாடத் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வழிமுறைகளை ஏற்படுத்தும். இதன்மூலம் எதிா்காலத்தில் டிஜிட்டல் திறமைகளுக்கான மையமாக தமிழகம் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில், அண்ணா பல்கலை. பதிவாளா் பிரகாஷ், பல்கலை. தொழில் கூட்டுறவு மையத்தின் இயக்குநா் சண்முகசுந்தரம், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு இயக்குநா் குணசேகரன் மற்றும் நாஸ்காம் இயக்குநா் உதய சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.