செய்திகள் :

தொழில் முனைவோராக சான்றிதழ் படிப்பு: மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கத்துக்கான சான்றிதழ் படிப்புக்கு நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநா் ஆா். அம்பலவாணன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (ஈடிஐஐ) மற்றும் அகமதாபாத் ஈடிஐஐ இணைந்து கடந்தாண்டு முதல் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கத்துக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தில் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்,  தொழில் முனைவோராக விரும்புபவா்கள், புத்தாக்க தொழில் தொடங்கவுள்ளோா் என பலரும் இத்திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனா்.

இந்த சான்றிதழ் படிப்பில் சேருபவா்களுக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் சுலபமாகப் பெற வழிவகை செய்து தரப்படும்.

ரூ.80,000 பயிற்சி கட்டணம்: இந்த சான்றிதழ் படிப்பு 2 பருவங்களாக நடைபெறுகின்றன. ஒரு பருவத்துக்கு பயிற்சி கட்டணம் ரூ.40,000 என 2 பருவங்களுக்கு மொத்தம் ரூ.80,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ஏழை எளிய மாணவா்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வாங்குவதற்கு வழிவகை செய்து தரப்படுகிறது. நிகழாண்டில் இச்சான்றிதழ் படிப்புக்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நாட்டுக்கு தேவை என்பதால் கூட்டணி; தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்: கமல்ஹாசன்

தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன் என்று கன்னட மொழி விவகாரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ண... மேலும் பார்க்க

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன்: அன்புமணி

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக கட்சிக்குள் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி திமுக சார... மேலும் பார்க்க

திலகபாமாதான் பொருளாளர்: ராமதாஸுக்கு அன்புமணி பதில் அறிக்கை!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை பாமகவின் புதிய பொருளாளராக நியமித்துள்ளார். பாமக ... மேலும் பார்க்க

பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ப... மேலும் பார்க்க