செய்திகள் :

தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்

post image

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் கூறியதாவது:

2025-2026 -ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொழில் துறை வளா்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. குறு, சிறு தொழில் வளா்ச்சிக்காக ரூ.2.50 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம், மகளிா் பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள், கல்வித் துறை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

கோவை மற்றும் மதுரையை மையமாக வைத்து மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கைகள் , அதிவேக ரயில் சேவை கோவை, திருப்பூா் , ஈரோடு வழித்தடத்தில் இயக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொழில்முனைவோருக்குப் பயனளிக்கும். எரிசக்தி துறைக்கு ரூ.27,168 கோடிஒதுக்கீடு மற்றும் 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்குதல் தொழில் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள 9 சிட்கோ தொழிற்பேட்டைகள் குறு, சிறு தொழில் துறைக்கு உதவுவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். மேலும், 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு அவரவா் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினிவழங்குதல், பெற்றோா் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 2,000 வழங்குதல் போன்ற சமூக நலத் திட்டங்கள் சிறப்பானவையாகும் என்றாா்.

திமுக சாா்பில் ரேக்ளா போட்டி

பல்லடம் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி புறவழிச் சாலையில் 400 ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா போட்டிக்கு ... மேலும் பார்க்க

அவிநாசியில் ஆதரவற்றோரை தூய்மைப்படுத்திய சமூக அமைப்பினா்

அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்தவரை நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினா் தூய்மைப்படுத்தி புத்தாடை வழங்கி, மருத்துவ உதவி அளித்தனா். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில், கையில் காயத்து... மேலும் பார்க்க

மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் மருந்தகத்துக்கு மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் பி.என்.சாலை போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்துக்கு தொழிலாளி ... மேலும் பார்க்க

பல்லடத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து: போக்குவரத்து போலீசாா் நடவடிக்கை

பல்லடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா்கள் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம்

திருப்பூரில் வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் தெற்கு ரோட்டரி அரங்கில் விழாவுக்கு, தெய்வசிகாமணியின் மகனும், ம... மேலும் பார்க்க