செய்திகள் :

தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்: வாட்சன் பேட்டி

post image

நேற்றிரவு சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியைச் சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது.

இதில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் தோனி முன்னதாகவே களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனம் அவர்மீது எழுந்து வருகிறது.

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் வாட்சன் பேசியதாவது:

தோனி முன்னதாக இறங்க வேண்டும்

16 பந்துகளில் 30 ரன்களை அடித்தார் தோனி. இதைப் பார்க்கதான் சிஎஸ்கே ரசிகர்கள் வருகிறார்கள்.

தோனி இன்னமும் வரிசையில் முன்னதாக களமிறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

எனது கருத்துபடி, அஸ்வினுக்கு முன்பாக தோனி களமிறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை தோனி பிடித்திருக்க வேண்டும்.

கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அழகாக விளையாட முடியுமென தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.

ருதுராஜ் மீண்டும் தொடக்க வீரர் ஆகலாம்

தோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக காட்ட முடியுமென உண்மையாலுமே நம்புகிறேன்.

எப்படியாகினாலும் இது தோனிக்கு புதியது கிடையாது. ஓய்வுபெற்றபிறகு கடைசி சீசனிலும் கடைசியாகத்தான் விளையாடினார்.

கேப்டன் ருதுராஜ் 4 பந்துகளில் டக் அவுட்டானார். சிஎஸ்கேவின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் சொதப்பியது.

ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ஹேசில்வுட்டுக்கு எதிராக அவரே இடம் கொடுத்து விளையாடியது அவரது இயல்பு அல்ல.

சிஎஸ்கே அணி சமநிலையில் இல்லை

பொதுவாக ருதுராஜ் நின்ற இடத்தில் இருந்து பந்துக்கு எதிர்வினை ஆற்றுவார். ஆனால், அவர் செய்தது அழுத்தத்தைக் காட்டுகிறது.

தீபக் ஹூடா ஆட்டமிழக்கக் கூடாதென்பது போலவே விளையாடுகிறார். சாம் கர்ரணை 5ஆவதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7ஆவதாக விளையாட வைக்கலாம்.

தற்போதைக்கு, சிஎஸ்கே அணியில் சமநிலை இல்லை. தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்றிருக்கலாம் என்றார்.

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வி... மேலும் பார்க்க

எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் பெங்களூரு- இன்று குஜராத்துடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 2) மோதுகின்றன.இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பெங்களூரு ‘ஹா... மேலும் பார்க்க

மூவா் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது. முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக... மேலும் பார்க்க

பூரண், பதோனி விளாசல்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னௌ அணி.முதலில் பேட் செய்த லக்னௌ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. லக்னௌ தரப்பில் அதிகபட்சமாக பூரண் 44, ப... மேலும் பார்க்க

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்... மேலும் பார்க்க