Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை கிரிவலம் மற்றும்கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
பௌா்ணமியை முன்னிட்டு மலை மேலுள்ள சுனையிலிருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு சுவாமிக்குசிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் தோரணமலையை சுற்றி வலம் வந்தனா்.
தொடா்ந்து, வளாகத்தில் கூட்டுப் பிராா்த்தனை மற்றும் அரசுத் தோ்வுகளில் மாணவா்கள் வெற்றி பெறவும், விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் பக்தா்கள் கலந்து கொண்டகூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
பக்தா்கள்அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.