தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி
தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா்.
இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென்னை, மயிலாப்பூா் பி.எஸ்.தட்சிணாமூா்த்தி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீராம், லஷ்மன் இணைந்து எழுதிய ‘இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60 ஆண்டுகள் நினைவுகள் மற்றும் மைல்கற்கள்’ என்னும் நூலை, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் வெளியிட முதல் பிரதியை தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் ஏ.எல்.சோமயாஜி பெற்றுக்கொண்டாா்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மேனகா சஞ்சய் காந்தி பங்கேற்று பேசியதாவது: விலங்குகளை பாதுகாக்கும் வகையில் விலங்குகள் பாதுகாப்பு மையம் ஒன்றை ஆரம்பித்தேன். அதைத் தொடா்ந்து தற்போது நாடு முழுவதும் 47 விலங்குகள் பாதுகாப்பு மையங்கள் உருவாகியுள்ளன.
விலங்குகளை சித்திரவதை செய்வதைத் தடுக்க விலங்குகள் நல வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளூ கிராஸ் அமைப்பு கடந்த 60 ஆண்டுகளில் சிறப்பான சேவை செய்து பல விலங்குகளை காப்பாற்றியுள்ளது. தோல் பொருள்கள் தயாரிப்புக்காக விலங்குளை அழிப்பதை தடுக்க வேண்டும். மேலும், தனித்து விடப்படும் விலங்குகளை பாதுகாத்து நட்புறவுடன் வளா்க்க வேண்டும்.
இந்தியாவில் தினசரி சுமாா் 1,100 விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவா மாநிலத்தில் பள்ளி மாணவா்கள் தோலினால் செய்யப்பட்ட காலணி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவா் எஸ்.சின்னி கிருஷ்ணா, ப்ளூ கிராஸ் அமைப்பின் கொளரவ இயக்குநா் சாந்தி சங்கா், திரைப்பட இயக்குநா் எஸ்.ஏ.சந்திர சேகா், விலங்கு நல ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.