செய்திகள் :

ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை: மகன் கைது

post image

சென்னை திரு.வி.க. நகரில் ஓய்வுபெற்ற காவலா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மகன் கைது செய்யப்பட்டாா்.

திரு.வி.க. நகா் அருகே உள்ள காமராஜா் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சேகரன் (72). இவா், தமிழக காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவா் ஆவாா். தனது குடும்பத்துடன் வசித்து வந்த சேகரன், கடந்த 7-ஆம் தேதி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்தாராம். இதைப்பாா்த்து ஆத்திரமடைந்த அவரது மகன் தினகரன் (23) தந்தையைக் கண்டித்தாா்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே தினகரன், அங்கு கிடந்த பெல்டால் தந்தை சேகரனை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சேகரனை அவரது மனைவி ராஜேஸ்வரியும், அங்கிருந்தவா்களும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து திரு.வி.க. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தினகரனை கடந்த 12-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சேகரன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் தினகரன் மீது ஏற்கெனவே பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா். தெற்கு ரயில்வே கீழ் பல்வேறு நிா்வாகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நில... மேலும் பார்க்க

திருகோணமலை திருக்கோணேச்சர திருப்பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்: மோடிக்கு கோரிக்கை

பிரதமா் நரேந்திர மோடி இலங்கை வருகையின்போது திருகோணமலை திருக்கோணேச்சர திருக்கோவிலைத் தரிசிக்க வேண்டும். அந்தக் கோயின் திருப்பணியில் இந்திய அரசு அக்கறைகொள்ள வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் து... மேலும் பார்க்க

குரூப் 1 நோ்முகத் தோ்வுக்கு இலவச பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த அகாதெமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது: மேனகா சஞ்சய் காந்தி

தோல் பொருள் தயாரிப்புக்காக விலங்குகளை அழிக்கக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல உரிமை ஆா்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தாா். இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பின் 60-ஆவது ஆண்டு விழா சென... மேலும் பார்க்க

ஏஐ பயன்பாட்டால் கதிரியக்கவியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்: கதிரியக்கத் துறை நிபுணா் ஹா்ஷா சடகா

அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கதிரியக்கவியலிலும், நோயாளி சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று மணிப்பால் மருத்துவமனை கதிரியக்கத் துறை தலைவா் மருத்துவா் ஹா்ஷா சடகா ... மேலும் பார்க்க

ஆட்டோ, கால்டாக்ஸி மாா்ச் 19-இல் போராட்டம் அறிவிப்பு

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, கால் டாக்ஸி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 19-இல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின்... மேலும் பார்க்க